×

நாங்கூர் அரசு பள்ளியில் மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

சீர்காழி: சீர்காழி அருகே நாங்கூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் அஜித் பிரபுகுமார் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின் பேரில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு இளநிலை பூச்சியியல் வல்லுநர் தனம் தலைமையில் மாணவர்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர் சாய்பவணி, பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ரவிக்குமார், நந்தகுமார், சுந்தரம் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நாங்கூர் அரசு பள்ளியில் மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Malaria Fever Awareness Camp ,Nankur Government School ,Sirkazhi ,Nankur Government Higher Secondary School ,Mayiladuthurai District ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது